பொலிஸ் வாகனத்தில் எழுதப்பட்ட ஆபாச வார்த்தைகள், வாகனத்திற்கும் சேதம்

Latest News

பொலிஸ் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டி முழுவதும் ஆபாசமான வார்த்தைகளால் எழுதப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று ஜா-எல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

ஜீப் வண்டியின் சாரதியான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் நேற்று (27) பொலிஸ் வாகன பழுதுபார்க்கும் நிலையத்தில் ஜீப்பைக் கழுவி சுத்தம் செய்வதற்காக நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, ​​ஜீப்பின் முன்புறம் மற்றும் கதவுகளில் ஆபாச வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தது.

ஜீப்பில் ஆபாசமாக எழுதியதுடன், வாகனத்தை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

எனினும், குறித்த பொலிஸ் வாகன பழுதுபார்க்கும் நிலையத்திற்குள் வெளிநபர்கள் நுழைவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லையெனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்தச் செயலைச் செய்தவர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

அதன்படி சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *