நாளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் கருதி பாடசாலைகளின் தவணைப் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை (15) நடைபெறவிருந்த பாடசாலை தவணைப் பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மேல் மற்றும் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.