நாம் தினம் தோறும் பால் பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது சிறந்ததது. முக்கியமாக பாலில் அதிக சுவையும் அதிக சத்துக்கள் இருப்பதாக மட்டும்தான் நம்மில் பலருக்கு தெரியும்.
அதற்கு மேலதிகமாக பாலில் நல்ல தரமான கொழுப்பு,புரதம், மக்னீசியம், சிறிய அளவில் மாவுச்சத்து, போன்ற பலவிதமான சத்துக்களும் இருக்கின்றது.
நாளாந்தம் 500 மி.லி. அளவு பாலைக் கண்டிப்பாக நாம் எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது வைத்தியர்கள் ஆலோசனை தருகின்றனர்.
எம்மில் பலருக்கும் ஏற்படும் கீழ்முதுகு வலியால் துடிதுடியாய் துடித்து விடுவார்கள் அவர்களுக்கு வீட்டிலேயே சிறந்த மருந்து ஒன்றை செய்து கொடுக்கலாம்.
இரண்டு ஏலக்காய் பொடியை ஒரு டீஸ்பூன் மஞ்சளுடன் சூடான பாலில் கலந்து கொள்ளவும் தினமும் படுக்கைக்கு முன் இந்த கலவை கலந்த பாலை குடித்து வந்தால் முதுகு வலி இல்லாமல் போய்விடும்.