மத்தவங்கள பாக்க நேரமில்லை. என்னோட வேலைய சுத்தமான செய்றேன்.

மத்தவங்கள பாக்க எனக்கு நேரமில்லை என்னுடைய வேலை எதுவோ அதை சுத்தமாக செய்து வருகிறேன் என்று இசைஞானி இளையராஜா சொல்லியிருக்கிறார்.

இசைஞானி இளையராஜா தனது பாடலுக்கான உரிமத்தை கேட்டதால் அதுகுறித்த செய்திகள் அடிக்கடி பரவி வரும் நிலையிலேயே இளையராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் அதுகுறித்து பேசிய வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

“என்னபத்தி நிறைய செய்திகள் வாரதா வேண்டியவர்கள் சொல்லுவாங்க. மத்தவங்கள கவனிக்குறது என்னுடைய வேலை இல்ல. என்னுடைய வேலைய கவனிக்குறது தான் என்னுடைய வேலை.

என் பாதையில கிளீனா சுத்தமா போயிட்டு இருக்கேன். நீங்கள் என்னை வாழ்த்துகொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிப்பொனியும் எழுதி முடித்துவிட்டேன். எனக்கு இருந்த வேலைகளுக்கு மத்தியிலும் சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன் என்ற எனக்கு சந்தோஷமான செய்தியை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

படங்கள் அல்லது பாடல்களின் இசை சாராமல் இந்த சிம்பொனி எழுதியிருக்கிறேன் என்பதை என்னுடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக சொல்லிகொள்கிறேன்.” என்று இளையராஜா அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.