CSKக்காக ஆடணும்னு ஆசை மட்டும் இல்ல. அதான் என்னோட கனவு!

CSKக்காக ஆடணும்னு ஆசை மட்டும் இல்ல. அதான் என்னோட கனவு

 

CSK க்காக ஆடணும்னு ஆசை மட்டும் இல்ல அதான் என்னோட கனவு என ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

 

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துச் சொன்ன அவர், “வாழ்நாள் முழுசுமான என்னோட தமிழ்நாட்டுக்காக தான் ஆடிருக்கேன். வேற எந்த மாநிலத்துக்காகவும் கிரிக்கெட் ஆடுனது கிடையாது. அதனால சென்னை அணிக்காக ஆடணும் நினைக்குறது ஆசை இல்லை அதான் என்னோட வாழ்நாள் கனவு.

 

ஆனால் ஐபிஎல் ஏளம் நடக்குற நேரம் ஒவ்வொரு டீமும் அவங்களுக்கு தேவையானவங்கள மட்டும் எடுக்க முடியாது. ஆனால் வேற வேற மக்கள் வேற வேற மாநிலத்துக்காக ஆடுறதுதான் ஐபிஎல் ஓட அழகே.

 

அதேநேரம் விஜய் சங்கர், வாசிங்டன் சுந்தர் மாதிரி வீரர்கள் அவங்களோட வாய்ப்ப பயன்படுத்தி டீமுகுள்ள வந்திருக்காங்க அது நல்ல விஷயம். டொமெஸ்டிக் கிரிக்கெட்க கிடைக்கிற வாய்ப்ப பயன்படுத்திக்கனவும். ஐ.பி.எல் – டீ.என்.பீ.எல் இரண்டுமே நல்ல வாய்ப்புதான்.

 

அஸ்வின் மற்றும் என்னை போன்ற தமிழ்நாட்டு வீரர்கள் ஆறு பேர் தேசிய அளவில் விளையாட கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. டீ – 20 மாதிரி டெஸ்ட் கிரிக்கெட் ஆட வாய்ப்பு கிடைச்சா அதையும் நல்லா பயன்படுத்திக்குவேன்.” என்று சொல்லியிருக்கிறார்.

 

#Dineshkarthik #RCB #TNW #CSK #Tamilnadu