அஜித் ரசிகர்களுக்கு ‘டபுள் ட்ரீட்’ காத்திருக்கு!

அஜித் ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்' காத்திருக்கு!

 

ஒன்றரை ஆண்டு காலமாகக் காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு ‘டபுள் ட்ரீட்’ கொடுக்கும் விதமாக புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது.

ராகவா லாரன்ஸைத் தொடர்ந்து களமிறங்கிய நடிகர் தாடி பாலாஜி!

நடிகர் அஜித் குமாரின் திரை வாழ்க்கையில் அதிக வசூலைக் குவித்ததாக சினிமா வட்டாரங்களில் கூறப்படும் திரைப்படம் துணிவு. ஹெச்.வினோத் கூட்டணியில் வெளியான அஜித்தின் முந்தைய திரைப்படமான வலிமை அதிக எதிர்பார்ப்பால் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சினிமாவில் சக போட்டியாளராக விளங்கும் விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன் வெளியான துணிவு திரைப்படம் அஜித் குமாருக்கு நல்ல கம்பேக் கொடுத்தது.

துணிவு திரைப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அஜித்திற்கு அடுத்த திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை. இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாகவே கைவிடப்பட்டது.

இதனையடுத்து, அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்தது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ‘விடா முயற்சி’ என பெயரிடப்பட்டு அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. அர்ஜுன், ஆரவ், த்ரிஷா உள்ளிட்டோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். இப்படியான சூழலில் தான் வீண் முயற்சியாக போனதா விடாமுயற்சி என்ற பேச்சுகள், மெல்ல முணுமுணுக்கத் தொடங்கின.

அதற்கு காரணம், அஜித்குமார் தனது பார்வையை பைக் பயணத்தின் பக்கம் திருப்பியிருந்தார். சமூக வலைதளங்களில் வெளியாகும் புகைப்படங்களில் பெரும்பாலானவை அவர் பைக்குடன் வலம் வருபவையாகவே இருக்கும். திரைப்படம் கைவிடப்பட்டதா? என்ற கேள்விக்கு விடையளிக்கும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளாக்கும் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது.

ஒரு வழியாக படப்பிடிப்பு கைவிடப்படவில்லை என்பது உறுதியானாலும், விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பும் நடைபெறாமல் இருந்தது. இதற்கிடையே, விடா முயற்சி படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என்ற திரைப்படத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கியது.

“நான் நிச்சயமாக எதிர்பார்க்கல….”- நடிகர் விஜய்சேதுபதி மகிழ்ச்சி!

இதனால் விடா முயற்சி என்னவானது என்ற பேச்சுக்கள் மீண்டும் எழ தொடங்கியுள்ளனர். தற்போது அந்த பேச்சுகளுக்கு நடிகர் அர்ஜுன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு 70 முதல் 80 சதவீதம் வரை நிறைவடைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவிருப்பதாகவும் நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. விடா முயற்சி திரைப்படமும் சிக்கலின்றி வெளியானால் குறுகிய காலத்தில் அஜித்தின் 2 திரைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களின் காத்திருப்புக்கு ‘டபுள் ட்ரீட்’ கொடுக்கும் என்றால் மிகையாகாது.