5 விக்கெட்டுக்களால் வென்றது பஞ்சாப்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) கவுகாத்தியில் உள்ள அசாம் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற 65-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது.

இந்த போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி , ராஜஸ்தான் அணி தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , டாம் கோலர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 4 ஓட்டங்களிலும் , டாம் கோலர் 18 ஓட்டங்களிலும் , பின்னர் வந்த சாம்சன் 18 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து ரியான் பராக் , அஸ்வின் இருவரும் சிறப்பாக ஆடினர். நிலைத்து ஆடி ஓட்டங்களை குவித்தனர். அஸ்வின் 19 பந்துகளில் 28 ஓட்டங்களும் , பராக் 34 பந்துகளில் 48 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் 144 ஓட்டங்களை எடுத்தது. பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கரன் , ராகுல் சாஹர் ,ஹர்சல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடர்ந்து 145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.