”சர்ச்சைகளிலிருந்து விலக நினைக்கிறேன்”கவிஞர் வைரமுத்து பேச்சு!

“சர்ச்சைகளிலிருந்து விலக நினைக்கிறேன்”- கவிஞர் வைரமுத்து பேச்சு!

அண்மையில் இசையமைப்பாளர் இளையராஜாவை விமர்சனம் செய்தததாக சர்ச்சை எழுந்த நிலையில், அது முடிந்து போன கதை எனவும், அதனை தொடர வேண்டாம் என நினைப்பதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

‘பனை’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா முடிந்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த கவிஞர் வைரமுத்து, “முடிந்த கதை…தொடர வேண்டாம் என்பது எனது அன்பான வேண்டுகோள்; எந்தவொரு மேடையிலும் சர்ச்சையான கருத்தை நான் உண்டாக்க விரும்புவதில்லை. நான் சர்ச்சைக்கு பிறந்தவன் இல்லை; சர்ச்சைகள் உண்டாக்கப்படுகின்றனர்.

உண்டாக்கப்படுகிற சர்ச்சைகளில் இருந்து நான் வெளியேற விரும்புகிறேன். ஆனால், காலம் சர்ச்சைகளை முடிப்பதற்கு விரும்பவில்லை என்று தெரிகிறது. நான் தமிழோடு இருக்க நினைக்கிறேன்; சர்ச்சைகளோடு விலக விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.