தீவிர பயிற்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

தீவிர பயிற்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

 

நியூயார்க்கில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

“யார பார்த்தாலும் தள்ளி நிற்கணும் என்பதை உடைத்தெறிந்த ஹீரோ இவர் தான்”-பாடலாசிரியர் சினேகன் பேச்சு!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்றழைக்கப்படும் ஐ.சி.சி.யின் டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 02- ஆம் தேதி அமெரிக்காவில் தொடங்குகிறது. மேற்கிந்திய தீவுகளிலும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளனர். மொத்தம் 55 போட்டிகள் நடைபெறவுள்ளன.

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் அமெரிக்கா, கனடா, உகாண்டா, பப்புவா நியூ கினியா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஓமன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, நேபாளம், இந்தியா, அயர்லாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளனர்.

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்திற்கு இயக்குநர் டி.ராஜேந்தர் புகழாரம்!

டி20 உலகக்கோப்பைக்கான பயிற்சி போட்டிகளும் தொடங்கியுள்ளன. இந்த சூழலில், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு சென்றுள்ள கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது தொடர்பாக வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.