“காமெடியாக நடிப்பது கஷ்டமா?”- நடிகர் சூரி விளக்கம்!

"காமெடியாக நடிப்பது கஷ்டமா?"- நடிகர் சூரி விளக்கம்!

 

இயக்குநர் வெற்றி மாறன் திரைக்கதையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருடன்’. நடிகர் சூரி, சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘இந்தியன் 2’ இசை வெளியீட்டு விழா….பட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்த திரைப்படம் இன்று (மே 31) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனிடையே, நடிகர் சூரி, இயக்குநர் துரை செந்தில்குமார் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, செய்தியாளர்கள் ஒருவர் வெற்றிமாறன் ‘கருடன்’ என்ற தலைப்பில் நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்குவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. அந்த கதை தான் இதா? அல்லது இப்படம் வேறொரு கதையா? என்று கேள்வி எழுப்பினார்.

கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தல்!

இதற்கு பதிலளித்த இயக்குநர் துரை செந்தில்குமார், “அது ஃபேன் மேடு போஸ்டர் ஆகும். அது இல்லை என்பதை வெற்றிமாறன் சார் ஏற்கனவே உறுதிச் செய்துவிட்டார். கோயில் சுற்றி படம் என்பதால் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் போது ‘கருடன்’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம்” என்றார்.

காமெடியாக நடிப்பது கஷ்டமா? ஆக்ஷனா நடிப்பது கஷ்டமா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு காமெடியாக நடிப்பது தான் கஷ்டம் என்றார் நடிகர் சூரி.