“தனியா இருந்து பழகிக்கோங்க….”- இயக்குநர் செல்வராகவன் உருக்கமான பேச்சு!

"தனியா இருந்து பழகிக்கோங்க...."- இயக்குநர் செல்வராகவன் உருக்கமான பேச்சு!

 

தமிழ் சினிமாவின் பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் காணொளி ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

‘இந்தியன் 2’ இசை வெளியீட்டு விழா….பட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

காணொளியில் இயக்குநர் செல்வராகவன் கூறியிருப்பதாவது, “கல்யாணம் ஆனவங்களோ, ஆகாதவங்களோ எல்லாருக்கும் ஒரு கனவு தான். நமக்குனு ஒருத்தியோ, ஒருவனோ வருவாங்க. நம்மள நல்லாபுரிஞ்சிக்குவாங்க; நம்மள மடில வச்சு நல்ல தாலாட்டுவாங்க. முதல் மரியாதை படத்துல சிவாஜி சாருக்கு ராதா வருவாங்க. அந்த மாதிரி என்ன சுத்தி யார புடிச்சிட்டா கூட கடைசி வரைக்கும், அந்த ஒருத்தர் உங்களுக்கு கிடைக்க மாட்டாங்க.

யானு யோசிச்சீங்கன்னா; மண்டையைப் போட்டு உடைச்சிப்பீங்க; கேட்ட மாதிரியே; நாம நினைச்ச மாதிரியே இதோ இருக்காங்களே. இது நாம நினைச்சவங்க இல்லையே.இந்த ஸ்டேட்டஸ் வரத்துக்கு முன்னாடியே கண்ணாடிய பாருங்க யாரு முகம் தெரியுதுனு. அது நீங்க தான்; நீங்க தான் உங்கல அமைதியா வச்சுக்கணும். உங்களுக்கு நீங்க தான் அமைதிய கொடுக்க முடியும். உங்கல சந்தோஷமா வச்சிக்க முடியும். உங்கல மடியில வச்சித் தாலாட்ட முடியும்.

“காமெடியாக நடிப்பது கஷ்டமா?”- நடிகர் சூரி விளக்கம்!

இத என் எக்ஸ்பீரியன்ஸ்ல சோல்ட்ரன். உங்கல விட உங்க பெஸ்ட் பிரண்டோ, நீங்க கனவுக்கான்ற ஒருத்தரோ யாரும் கிடைக்க மாட்டாங்க. நீங்களா சாப்பிட்டு பழகுங்க; தனியா நடந்து பழகுங்க. தனியா உங்கள் இயற்கைக்கு பிடிச்சவங்களோட உட்காந்து மணிக்கணக்குல பேசுங்க. அப்புறம் ஒரு மேஜிக் நடக்கும் பாருங்க” என்று குறிப்பிட்டுள்ளார்.