“உலகத்துலயே ரொம்ப கஷ்டப்படுற ஒரே ஆளு உண்மையை பேசுறவன்தான்”- நடிகர் சிம்பு சொன்ன தத்துவம்!

"உலகத்துலயே ரொம்ப கஷ்டப்படுற ஒரே ஆளு உண்மையை பேசுறவன்தான்"- நடிகர் சிம்பு சொன்ன தத்துவம்!

 

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று (ஜூன் 01) மாலை 06.00 மணிக்கு ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தின் இயக்குநர் சங்கர், நடிகர் கமல்ஹாசன் மற்றும் படத் தயாரிப்பாளர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

“அப்பா இயக்கத்தில் திரைப்படத்தில் நடிப்பது எப்போது?”- நடிகை அதிதி சங்கர் விளக்கம்!

விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சிம்பு, “ஷுட்டிங் முடிச்சிச்சுட்டுதான் விழாவுக்கு வந்தேன். இந்தியன் 2 திரைப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள். STR 48, Thug Life படங்கள் வரவிருக்கு; எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உலகத்துலயே ரொம்ப கஷ்டப்படுற ஒரே ஆளு உண்மையை பேசுறவன்தான்; நானும் நிறைய பேசியிருக்கேன்” எனத் தெரிவித்துள்ளார்.

“விஜய்யிடம் கற்பதற்கு நிறைய இருக்கிறது”- நடிகர் மோகன் பெருமிதம்!

தற்போது நடிகர் சிம்புவின் பேட்டி, ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப்பக்கங்களில் வைரலாகி.வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.