தகுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது இந்திய கால்பந்து அணி….சர்ச்சையில் கத்தார் வீரர்கள்….சரமாரியாக கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

தகுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது இந்திய கால்பந்து அணி....சர்ச்சையில் கத்தார் வீரர்கள்....சரமாரியாக கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

 

கத்தாரிடம் தோல்வியடைந்த இந்திய அணி பிஃபா உலகக்கோப்பைத் தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறியது.

“உங்க ட்ரீம் என்ன?”- பத்திரிகையாளர்களை வியக்க வைத்த பாலாவின் பதில்!

கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடந்த போட்டியில் கத்தாரை எதிர்கொண்ட இந்திய கால்பந்து அணி, 1-2 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியிடம் தோல்வியைத் தழுவியது. தகுதிச் சுற்று ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

அதைத் தொடர்ந்து, கத்தாரின் யூசுப், அல்ராவி 73 மற்றும் 85 ஆவது நிமிடங்களில் கோல் அடித்தனர். 1-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

நடிகர் சுரேஷ் கோபியின் அதிரடி பேட்டியால் பரபரப்பு!

இதனிடையே, இப்போட்டியில் எல்லைக் கோட்டைத் தாண்டி சென்ற பந்தை மீண்டும் உள்ளே கொண்டு வந்து கத்தார் வீரர்கள் கோல் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விதிப்படி, தவறு என்றாலும் ரெஃப்ரீ கத்தாருக்கு சாதகமாக நடந்துக் கொண்டது சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.கால்பந்தில் ரிவ்யூ பார்க்கும் VAR முறையைப் பயன்படுத்தாதது ஏன்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.