ராகவா லாரன்ஸுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா! (வைரலாகும் காணொளி)

ராகவா லாரன்ஸுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா! (வைரலாகும் காணொளி)

 

நடன இயக்குநர், நடிகர், திரைப்பட இயக்குநர் என பன்முகத்திறன் கொண்ட ராகவா லாரன்ஸ், ‘மாற்றம்’ என்ற பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கி, விவசாயிகள், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

‘GOOGLE GEMINI’- யிடம் தமிழில் கேள்விக் கேளுங்கள்……அறிமுகமானது கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்!

அவருக்கு பல்வேறு பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து, உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ், ஏற்கனவே விவசாயிகளுக்கான 10 டிராக்டர்களை வழங்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, மேலும், ஒரு டிராக்டரை தனது சொந்த பணத்தில் வாங்கிய திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் வீட்டிற்கு கொண்டு வந்து, அவருக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.

 

இது தொடர்பான காணொளியை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் ராகவா லாரன்ஸ், தலைவா, இது என்ன சர்ப்ரைஸ் என்று கேட்க, அதற்கு எஸ்.ஜே.சூர்யாவோ, மாற்றத்தின் மூலமா சிறந்த மாற்றத்தை உண்டாக்கிட்டு இருக்கீங்க. என் மூலமா ஒரு டிராக்டர் உங்களுக்கு கொடுக்கறன். நீங்க யாருக்கு கொடுக்கிறீங்களோ, கொடுங்க… என்றார்.

 

இதற்கு ராகவா லாரன்ஸோ, “உங்க பணம், நீங்க கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்துல டிராக்டர் கொடுக்கறீங்க… நான் கொடுத்து நான் பேரு வாங்க கூடாது. உங்க கையாள நீங்களே கொடுங்க வாங்க போலாம்” என்று கூறி அவரை காரில் அழைத்துச் சென்றார்.

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக கம்பீர் ஓரிரு நாட்களில் நியமனம்?

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்ரி என்ற இளைஞருக்கு டிராக்டர் வழங்கப்பட்டது. பின்னர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.