“குழந்தைக்கு அம்மாவாக நடிக்க என்ன காரணம்?”-கண் கலங்கிய நடிகை வாணி போஜன்!

"குழந்தைக்கு அம்மாவாக நடிக்க என்ன காரணம்?"-கண் கலங்கிய நடிகை வாணி போஜன்!

 

அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கத்தில் நடிகர் விதார்த், நடிகை வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘அஞ்சாமை’. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் ஜூன் 07- ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

“நானும் உங்க புள்ளதான்”… பாட்டியைத் தத்தெடுத்த இளைஞர்!

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ‘அஞ்சாமை’ படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது நடிகை வாணி போஜன் கூறுகையில், “எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான திரைப்படம் ‘அஞ்சாமை’. உயிருக்கு உயிரா இந்த படத்தை ரொம்ப லவ் பண்றேன். எல்லோரும் உயிரைக் கொடுத்து வொர்க் பண்ணிருக்கோம். எல்லாரும் கேட்டார்கள் ஏன் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தீர்கள்? என்று. அதற்கு நான் சொன்னேன், 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கவில்லை என்றால் நான் நடிகையாக இருப்பதற்கு அர்த்தம் இல்லை.

காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை! (வைரலாகும் வீடியோ)

இந்த படம் திரையரங்குகளில் நன்றாக ஓடுமா? இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் இந்த படத்தை ரொம்ப லவ் செய்து பண்ணிருக்கேன். இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு இயக்குநர்பட்ட கஷ்டத்தை நான் நன்கு அறிவேன் என்று கூறி கண் கலங்கினார். நாங்கள் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்போம்; சம்பளமும் உயரும். இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு அதிகம் கஷ்டப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.