விஷச்சாராய உயிரிழப்புகள்- தமிழ்நாடு அரசுக்கு நடிகர் விஷால் கோரிக்கை!

விஷச்சாராய உயிரிழப்புகள்- தமிழ்நாடு அரசுக்கு நடிகர் விஷால் கோரிக்கை!

 

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்திய விவகாரத்தில் சுமார் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 90- க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆழந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா….வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா அணி!

அந்த வகையில், நடிகர் விஷால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ்நாட்டில் விஷச்சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும், போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

“கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.”

“அவர் இல்லையென்றால் சச்சின் உலகக்கோப்பையைக் கையில் ஏந்திருக்கமாட்டார்”- கனடா கிரிக்கெட் வீரர் கருத்து!

என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு விஷச் சாரயத்தை ஒழிக்கவும், சமீப நாட்களாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வாயிலாக தமிழக மக்களின் ஒருவனாக தமிழ்நாடு அரசிற்கு சமர்பிக்கிறேன்”. இவ்வாறு நடிகர் விஷால் குறிப்பிட்டுள்ளார்.