மற்றுமொரு தமிழ் வீரருக்கு வாய்ப்பு தந்தது SHR

ஐபிஎல் (IPL) தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் (SRH) மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி சார்பாக இலங்கை வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் (Vijayakanth Viyashkanth) தனது முதலாவது ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார்.

இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து ஹசரங்க காயம் காரணமாக தொடரின் ஆரம்பத்திலேயே வெளியேறியிருந்தார்.
அவருக்கு பதிலாக மாற்று வீரராக வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இந்நிலையில், இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் அவர் களமிறங்கினார்.

ஐ.பி.எல் வரலாற்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் விளையாடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.