தலித்தியத்தை விற்று 100 கோடி சம்பாதிக்க திட்டம்! தயாரிப்பாளர் சௌத்திரிதேவர்

சாதியத்தை விற்று அறுவடை செஞ்சி சினிமால 100 கோடி சம்பாதிக்க இயக்குனர் பா.ரஞ்சித் போன்றவர்கள் திட்டம் போட்டு வருவதாக தயாரிப்பாளர் சௌத்திரிதேவர் சொல்கிறார்.

பிரபல ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய பேட்டியில் “எங்க சாதிக்கு பாடுபடுறதால எங்களுக்கு பைசா கூட பிரயோசணம் இல்ல. ஆனால் அது எங்க உணர்வு. இரத்துல இருக்கு என் சாதிக்கு ஒன்னுனா வந்து நிப்பேன்.

பா.ரஞ்சித் போன்றவர்கள் அந்த பிரச்சினையில் விளைச்சல் செய்து அறுவடையும் பாக்குறாங்க. உங்க சாதிக்காக மட்டும் தான் பேசுவீங்களா இருந்தா சாதியவாதியாவே வந்து நில்லுங்க. நாங்களும் வாரோம்.

தலித்திய மக்களின் பிரச்சினைகளை படமெடுத்து இலாபம் பார்க்கிறவங்க தான் அதிகம். தலித் மக்களுக்கு ஒன்னுனா கொதிக்கிறவங்க மற்ற சாதிக்காக ஏன் வரமாட்டாங்க.

சின்னத்துரை என்ற பையன் பரீட்சையில் வெற்றி பெற்றா அவனை பாராட்டுங்க அதுக்காக சாதிய பிரச்சினையில பாதிக்கப்பட்ட மாணவன்னு அவனுக்கு முத்திரை குத்தாதீங்க.” என்று சொல்லியிருக்கிறார்.