எனக்கும் வாய்ப்பில்லை அண்ணனும் அணியில் இல்லை மனம் வலிக்கிறது!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது அதைவிடவும் அண்ணனுக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருதத்தமும் அதிகமாக உள்ளது. என்று சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் வீரர் நடராஜன் கூறியுள்ளார்.

 

 

இதுபற்றிய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் “தமிழ் நாடு சார்பா யாராவது ஒரு ஆளாவது தமிழ் நாடு சார்பா ஆடிருக்காங்க ஆனால் இந்த வருடம் யாருக்கும் வாய்ப்பு கிடைக்கல. எனக்கும் கிடைக்கல அண்ணன் அஷ்வினுக்கும் கிடைக்கல. ஸ்போர்ட்ஸ்ல இதெல்லாம் சகஜம் தான்.

 

 

 

 

இத நினைச்சா முழு தமிழ் நாட்டுக்கும் வேதனையா இருக்கு. அதே கவலை எனக்கும் இருக்கு. நாம நினைச்ச மாதிரி எல்லா நேரமும் ஆட முடியாது. புதுசு புதுசா பலருக்கு இப்போ வாய்ப்பு கிடைக்குது அது நல்ல விஷயம் தான்.நமக்கு புறக்கணிப்பு இருக்குனு நினைச்சா நான் இன்னைக்கு இந்த டீம்ல வந்து ஆடியிருக்கவே முடியாது.” என்று சொல்லியிருக்கிறார்