“எனது பாட்டு படத்தின் தலைப்பு…நான் கேட்பதில்லை….”- இளையராஜாவைச் சீண்டிய கவிஞர் வைரமுத்து!

"எனது பாட்டு படத்தின் தலைப்பு...நான் கேட்கப்பதில்லை...."- இளையராஜாவைச் சீண்டிய கவிஞர் வைரமுத்து!

 

சென்னையில் நடந்த ‘வேட்டைக்காரி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, பாடலை வெளியிட, தமிழக அமைச்சர் பெரியகருப்பன் பெற்றுக் கொண்டார்.

“அவர் எனது கிரிக்கெட் மைதானத்திற்கு வருவதாக உறுதியளித்துள்ளார்”- கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி!

விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, “நீ தானே என் பொன்வசந்தம் என்பது என் பாட்டு தலைப்பு; விண்ணை தாண்டி வருவாயா என்பது என் பாட்டு தலைப்பு. இவர்கள் யாரும் வைரமுத்துவைப் பார்த்தோ, தொலைபேசியில் கேட்டோ இந்த தலைப்பைப் பயன்படுத்தியதில்லை. அத்தனை பேரும் வைரமுத்து நமக்கானவர்.தமிழ் நமக்கானது. ஏன் கேட்க வேண்டும்? என்ற உரிமையை எடுத்துக் கொள்கிறார்கள்.

"எனது பாட்டு படத்தின் தலைப்பு...நான் கேட்கப்பதில்லை...."- இளையராஜாவைச் சீண்டிய கவிஞர் வைரமுத்து!

இவர் மோடி Biopic-ஐ இயக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்- நடிகர் சத்யராஜ் ஓபன் டாக்!

நானும் கேட்பதில்லை. இதனை நீங்கள் கேட்பதில்லையா என சில பேர் கேட்டார்கள். நான் ஜெயகாந்தன் பதிலை சொன்னேன். ஜெயகாந்தன் சொன்னார் புதிய வார்ப்புகள் என்பது உங்கள் படைப்பு அல்லவா, உங்கள் சிறுகதை தொகுதி அல்லவா, ஏன் கேட்க வேண்டும்? இல்லாதவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். எப்படியோ நல்ல வழியில் தமிழ் ஒலிக்க வேண்டும். உச்சரிக்கும் பொழுது நாவில் தேன் ஊற வேண்டும்; செவியில் தென்றல் வீசிவிட்டு போக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.