டி20 உலகக்கோப்பையை வெல்ல நியூயார்க் மைதானத்தில் பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்!

தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்!

 

டி20 உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தல்!

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு சென்றடைந்தது.

அதைத் தொடர்ந்து, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டும் வரும் காணொளியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

“அவர் எனது கிரிக்கெட் மைதானத்திற்கு வருவதாக உறுதியளித்துள்ளார்”- கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி!

வரும் ஜூன் 05- ஆம் ஆண்டு இரவு 08.00 மணிக்கு நடைபெறும் நியூயார்க்கில் நடைபெறும் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. அதேபோல், ஜூன் 09- ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.