நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!

 

நடிகர் சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதிக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எங்களுக்கு நேற்று (ஜூன் 02) இரவு ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும், ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

“கடினமான சமயங்களில் ஓடி ஒளிய மாட்டேன்”- கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

நடிகர் சிவகார்த்திகேயன்- ஆர்த்தி தம்பதிக்கு திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் உள்ளிட்டோர் சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.