ஹர்திக் பாண்டியா, பும்ராவின் அபார பந்து வீச்சால் வீழ்ந்தது அயர்லாந்து அணி!

ஹர்திக் பாண்டியா, பும்ராவின் அபார பந்து வீச்சால் வீழ்ந்தது அயர்லாந்து அணி!

 

அயர்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு பரிசுத் தொகையை அள்ளி வீசிய ஐ.சி.சி.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி, அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. நியூயார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடியது.

அயர்லாந்து அணியின் வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியமால் திணறினர். இதனால் அயர்லாந்து அணி 16 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 3, பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், அக்ஷர் படேல் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

மணமகள் மீடியாவைச் சேர்ந்தவரா?- ‘நடிகர் பிரேம்ஜி’ திருமணம் குறித்து வெங்கட் பிரபு அறிக்கை!

பின்னர் விளையாடிய இந்திய அணி 12.2 ஓவரிலேயே 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 1 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, களமிறங்கிய ரோஹித் சர்மா 52 ரன்களையும், ரிஷப் பண்ட் 36 ரன்களையும் எடுத்தனர். இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை பும்ரா பெற்றார்.