“சந்தோஷமாக தான் பிரிந்தோம்….நான் சினிமாவிற்கு வந்ததற்கு காரணம் யார்?”- நடிகை நளினி விளக்கம்!

"சந்தோஷமாக தான் பிரிந்தோம்....நான் சினிமாவிற்கு வந்ததற்கு காரணம் யார்?"- நடிகை நளினி விளக்கம்!

 

தனியார் தொலைக்காட்சிக்கு திரைப்பட முன்னணி நடிகை நளினி நேர்காணல் அளித்துள்ளார். அதில் தனது திருமணம் நிகழ்வுகள், சினிமாவில் நிகழ்ந்த சுவாரஷ்யங்கள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா, பும்ராவின் அபார பந்து வீச்சால் வீழ்ந்தது அயர்லாந்து அணி!

அதில் நடிகை நளினி தெரிவித்ததாவது, “எனது கணவர் ராமராஜன் நன்றாக ஜாதகம் பார்ப்பார்; நாம் பிரிந்துடுவோம் என்று அவர் சொன்னார். நாம் பிரிவது குறித்து நாம் இருவரும் தான் முடிவுச் செய்ய வேண்டும்; அப்படி இருக்கும் பொழுது எப்படி பிரிவோம் என்று கேள்வி எழுப்பினேன். அதனால் இருவருக்குமே தெரியும் நாம் பிரிய போகிறோம் என்று.

"சந்தோஷமாக தான் பிரிந்தோம்....நான் சினிமாவிற்கு வந்ததற்கு காரணம் யார்?"- நடிகை நளினி விளக்கம்!

அதற்கு பிறகு எங்களுக்கு பெண் மற்றும் ஆண் குழந்தை பிறக்கும் போது, நிச்சயமாக நாங்கள் பிரிந்திருவோம் என்று கூறினார்கள். சண்டைப் போட்டு கொண்டு எதற்கு பிரிய வேண்டும் சந்தோஷமாகவே பிரிந்துக் கொள்ளலாம் என்று பிரிந்துவிட்டோம். அவரை திருமணத்திற்கு பிறகு தான் காதலித்தேன்; ஆனால், அவர் திருமணத்திற்கு முன்பே என்னை காதலித்தார். அவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளார்.

மணமகள் மீடியாவைச் சேர்ந்தவரா?- ‘நடிகர் பிரேம்ஜி’ திருமணம் குறித்து வெங்கட் பிரபு அறிக்கை!

அவர் வெகுளியானவர்; அவரை ரொம்ப பிடிக்கும். அவர் நல்ல மனிதர். எனக்கு குடும்பமே கலை குடும்பம் தான். அம்மாவின் அழுத்தம் காரணமாகவே சினிமாவிற்கு வந்தேன். திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்தேன்; எனினும், எனக்கு சாப்பாடே இதில் தான் என்று எழுதப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.