குவைத் தீ விபத்து- நடிகர் விஜய் இரங்கல்!

குவைத் தீ விபத்து- நடிகர் விஜய் இரங்கல்!

 

குவைத் நாட்டில் தொழிலாளர்கள் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்த்த பயங்கர தீ விபத்தில் 40- க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிய பலர், அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பெற்றுவர்களை குவைத்திற்கான இந்திய தூதர் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

“அதுதான் தமிழரின் குணம்…..”- நடிகர் ரஜினிகாந்த் பெருமிதம்!

குவைத்தில் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உலக நாடுகளின் தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குவைத் தீ விபத்து- நடிகர் விஜய் இரங்கல்!

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், “குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

நடிகர் பிரதீப் விஜயன் மரணம்!

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.